Dienstag, 26. Februar 2008

விளக்கை போலவே மனித வாழ்க்கை

விளக்கை போலவே மனித வாழ்க்கை

நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது. அதுபோலவே வேதனையையும் அதிகப் படுத்த முடியாது.

இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப-துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒன்று போலவே இருக்கும்.நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கத்திற்கும்.

அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கத்திற்கும் அதை தள்ளுவதுதான்
ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால் அப்படியே இருப்பது அதன் இயல்பு.

ஏற்றமும். இறக்கமும் எழுச்சியும் வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு. அப்படியில்லை என்று கருதுவது. சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது வாழ்வென்றால் அதில் மரணமும் அடங் கியிருக்கிறது
அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

விளக்கு எரியும் போது அழிந்து கொண்டே இருக்கிறது.
அதுதான் அதனுடைய வாழ்க்கை.

அதுபோல்தான் மனித வாழ்க்கையும்.
வெவ்வேறு கோணங்களில் பார்க் கப்பட்ட ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங் களே வாழ்வும். சாவும்..ஒரே அணையின் வீழ்ச்சியும். எழுச்சியுமே அவை. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையா கின்றன. ஒருவன் ஹவீழ்கின்ற' பக்கத்தை பார்த்து விட்டு துன்ப நோக்குடையவனாகிறான். மற்றொரு வன் எழுகின்ற பக்கத்தை பார்த்துவிட்டு இன்ப நோக்குடையவனாகிறான்.

-விவேகானந்தர்.

Keine Kommentare: