Montag, 9. April 2007

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்


http://clearblogs.com/piriyaa/



பதினெட்டாம் படி பாலகன் வரலாறு



அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள்.

அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா.

இவள் முன் தோன்றி. வேண்டும் வரம் கேள் என்றார்.சிவனுக்கும். விஷ்ணுவுக்கும்.

பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும். பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும். பந்தளத்து அரசனுமான ராஜசேகரன். குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான்.

ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன். மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

இதை உணர்ந்த மந்திரி. மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும். வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால்.

கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான். மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான்.

ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி.

மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும். தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர்.

பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும்.

பெருமையும் உணர்ந்து மந்திரியும். ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.மணிகண்டனும். மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோஇ அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து. இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான்.

அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன். கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.மணிகண்டன் கட்டளைப்படி. அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண். உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி மத பேதமின்றி மாலை அணிந்து 4 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
http://rahini.blogspot.com/

ராகினி

ஜேர்மனி.

திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்


திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்



திருமண வயதை தாண்டியும் நாட்டில் எவ்வளவோ, பெண்களும், ஆண்களும் பல்வேறு காரணங்களால் திருமண பாக்கியம் அமையாமல் வேதனையில் வாடுகின்றனர்.


ஜாதகப்பொருத்தம் சரியில்லாமல் இருப்பது, வரதட்சணை பிரச்சினை, பொருத்தமான ஜோடி கிடைக்காமல் இருப்பது என பணக்காரர்கள் ஏழைகள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பெரும்பாலான குடும்பங் களில் இந்த பிரச்சினை எதிரொலிக்கிறது.

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரை வில் திருமண பாக்கியத்தை கொடுக்கும்.

சக்தி கீழ்கண்ட மந்திரத்துக்கு உண்டு. `காத்யாயனீ மஹாதேவி மஹா மாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே தாதுமர் ஹனி. ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே. சரண்யே த்ரயம்பகே கவுரி நாராயணி நாமோஸ்துதே.

மேற்கண்ட மந்திரத்தை தாமரைப்பூ தண்டு திரியில் 5 முகம் கொண்ட விளக்கில் நெய் தீபம் ஏற்றி விடியற் காலை 5.30 மணிக்கு கிழக்கு திசை நோக்கி பார்த்து அல்லது விளக்கை பார்த்து 45 தடவை சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இவ்வாறு செய்ய வேண்டும்.

இவ்வாறு மந்திரம் ஜெபிக்கும் போது சம்பந்தப்பட்ட ஜாதக குறிப்பை மஞ்சள் தடவை அம்பாள் படத்தின் முன்னே வைத்து விட வேண்டும்.


இவ்வாறு பூஜிக்கப்பட்ட ஜாதகத்தை திருமண பேச்சு வார்த்தை நடக்கும் சமயங்களில் கொண்டு சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.

----------

ராகினி


ஜேர்மனி.

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்


சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்



வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்ம தேவன் புஷ்கரம் என்கிற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தைத் தொடங்கினார்.

அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள்.


5 திருமுகங்களையும் 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இந்த காயத்ரி மந்திரம் சொல்லும் போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீ விஷ்ணுவையும் நினைவில் நிறுத்திச் சொல்ல வேண்டும்.இதைச் சொல்வதால் கொடிய வினைகள் அகலும். உடல் பலமும், மனோபலமும் கூடும்.

கீழ்க்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்திச் சொல்ல வேண்டும்.


ஓம்


பூர்ப் புவஸ்ஸுவதத்ச

விதுர் வரேண்யம்பர்கோ

தேவஸ்ய தீமஹிதியோ

யோன ப்ரசோதயாத்.


போகமுனிவர்

பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர் சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.
அக்காலத்தில் சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில் மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளை தயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்து சேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால் உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்ட போகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரது உடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம் தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம் என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்
ஒரு முறை தன் தாய்க்கு தான் யார் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார் போகர். "தெய்வப்பிறவியான நான் இந்த உலக மக்களின் நன்மைக்காக வந்து பிறந்துள்ளேன்' என கூறியிருக்கிறார். சிங்கங்களைக்கூட இனிய குணம் கொண்டவைகளாக போகர் மாற்றியிருக்கிறார். ஒருமுறை காட்டில் தவம் செய்துகொண்டிருந்த அவர் அருகில் குட்டி சிங்கம் தனது நாக்கால் அவரது வாயை தடவிக்கொண்டிருந்தது.
அப்போது போகரின் கண்ணிலிருந்து கண்ணீர் துளி தெறித்து குட்டியின் வாயில் பட அந்த நிமிடமே அந்த சிங்கக்குட்டிக்கு பெரும் ஞானம் ஏற்பட்டது. உயிர்களை கொன்று வாழ்வது தவறு என்பதை புரிந்துகொண்டது.
இதையடுத்து எல்லா சிங்கங்களும் ஒன்று சேர்ந்து தங்களால் அசுத்தப்படுத்தப்பட்ட அந்த இடத்தை சுத்தப்படுத்தின. கண் விழித்த முனிவர் சிங்கங்களிடம் தனக்கு நன்மை செய்த அந்த சிங்கங்கள் "ராஜமிருகம்' என அழைக்கப்படும் என்றார். அதனால்தான் சிங்கங்களை "சிங்கராஜா' என்கிறார்கள்.
போகர் பழநிமலையில் இருந்ததால் தண்டபாணி தெய்வம் அவருக்கு காட்சியளித்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.தன்னை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதைக்கூட முருகப்பெருமானே போகரிடம் சொல்லியிருந்தார்.
அதன்படியே முருகனுக்கு சிலை செய்தார் போகர். போகரின் முக்கிய சீடராக இருந்த புலிப்பாணியும் ஒரு சித்தர்தான்.
ஒருமுறை அந்தணர்கள் வசிக்கும் பகுதிக்குள் சென்ற போகரை அங்கிருந்து விரட்டிவிட்டார்கள். உடனே போகர் அந்த வழியாக சென்ற ஒரு பூனையின் காதில் ஏதோ சொன்னார். அந்த பூனை நான்கு வேதங்களையும் வரிசைப்படுத்தி அழகாகச் சொன்னது. இதைக்கண்டு அந் தணர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு பூனையையே வேதம் ஓதவைத்த இவர் மகானாகத்தான் இருக்க வேண்டும் என கருதி மன்னிப்புகேட்டனர்.
அதன்பின் தங்கள் வறுமை நீங்க ஏதாவது வழி செய்ய வேண்டுமென போகரிடம் கேட்டார்.
போகர் அந்த அந்தணர்களின் வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் ஒரு இடத்தில் குவிக்கச்செய்து அதன் மீது விராட்டியை அடுக்கி தீ பற்ற வைத்தார்.
அந்த பாத்திரங்கள் அனைத்தும் தங்கமாக மாறிவிட்டன. அந்தணர்கள் வறுமை நீங்கப்பெற்றனர்.இப்படி பல அற்புதங்களை செய்தவர் போக முனிவர்.
-------
ராகினி
ஜேர்மனி.

விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.



http://rahini.blogspot.com/


விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.



முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானைத் துதித்துச் செய்ய வேண்டிய பூஜை இது.

இந்த பூஜை செய்வதால் என்னென்ன பலன்கள்...?எல்லா நலன்களும் நிறைந்த பரிபூரண வாழ்க்கை கிடைக்கும்.

தொழில் மேன்மை, நிறைந்த செல்வம், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

இந்த பூஜையை யார் செய்யலாம்...?ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்தே செய்யக் கூடிய பூஜை இது.பூஜை எப்போது செய்ய வேண்டும்?

ஆவணி மாதம் சுக்கில பட்சத்தில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும்.

பூஜை செய்யும் முறைகாலையிலிருந்து எதுவும் சாப்பிடாமலிருந்து பூஜை முடிந்தபின் சாப்பிடவேண்டும்.

பூஜையறையில் ஒரு பலகையில் கோலமிட்டு ஒரு தலைவாழை இலை போடவேண்டும்.

இலையின் நுனி, வடக்கு பார்த்து இருக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி மேலே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். அருகம்புல், எருக்கம்பூ, ஜாதிமல்லி போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

பிறகு, தேங்காய் பூரணம் வைத்த மோதகத்தை (கொழுக்கட்டையை) விநாயகருக்குப் படைக்க வேண்டும்.இந்தக் கொழுக்கட்டைக்குள் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது தெரியுமா? வெளியே இருக்கும் மாவு இந்த உலகத்தைக் குறிக்கிறது.

உள்ளே இருக்கும் பூரணம்தான் இறைவன். இந்த உலக வாழ்க்கை என்ற மாயையைத் துறந்தால், 'இறைவன்' என்ற பூரணத்தை அடையலாம்.கொழுக்கட்டையோடு அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய் போன்றவற்றையும் படைக்கலாம்.

பிறகு 108 விநாயக அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.

அடுத்தநாள் காலையில் புனர் பூஜை செய்ய வேண்டும். அதாவது தயிர்சாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு, அன்று மாலையில் குளத்திலோ அல்லது கிணற்றிலோ பிள்ளையாரைக் கரைத்து விடலாம்!


ராகினி

ஜேர்மனி.