Montag, 9. April 2007

திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்


திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்



திருமண வயதை தாண்டியும் நாட்டில் எவ்வளவோ, பெண்களும், ஆண்களும் பல்வேறு காரணங்களால் திருமண பாக்கியம் அமையாமல் வேதனையில் வாடுகின்றனர்.


ஜாதகப்பொருத்தம் சரியில்லாமல் இருப்பது, வரதட்சணை பிரச்சினை, பொருத்தமான ஜோடி கிடைக்காமல் இருப்பது என பணக்காரர்கள் ஏழைகள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பெரும்பாலான குடும்பங் களில் இந்த பிரச்சினை எதிரொலிக்கிறது.

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரை வில் திருமண பாக்கியத்தை கொடுக்கும்.

சக்தி கீழ்கண்ட மந்திரத்துக்கு உண்டு. `காத்யாயனீ மஹாதேவி மஹா மாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே தாதுமர் ஹனி. ஸர்வ மங்கள மாங்கல்யே ஸிவே ஸர்வார்த்த ஸாதிகே. சரண்யே த்ரயம்பகே கவுரி நாராயணி நாமோஸ்துதே.

மேற்கண்ட மந்திரத்தை தாமரைப்பூ தண்டு திரியில் 5 முகம் கொண்ட விளக்கில் நெய் தீபம் ஏற்றி விடியற் காலை 5.30 மணிக்கு கிழக்கு திசை நோக்கி பார்த்து அல்லது விளக்கை பார்த்து 45 தடவை சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இவ்வாறு செய்ய வேண்டும்.

இவ்வாறு மந்திரம் ஜெபிக்கும் போது சம்பந்தப்பட்ட ஜாதக குறிப்பை மஞ்சள் தடவை அம்பாள் படத்தின் முன்னே வைத்து விட வேண்டும்.


இவ்வாறு பூஜிக்கப்பட்ட ஜாதகத்தை திருமண பேச்சு வார்த்தை நடக்கும் சமயங்களில் கொண்டு சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும்.

----------

ராகினி


ஜேர்மனி.

Keine Kommentare: