Montag, 9. April 2007

சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்


சகல தேவதா ஸ்ரீ காயத்ரி மந்திரங்கள்



வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

பிரம்ம தேவன் புஷ்கரம் என்கிற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தைத் தொடங்கினார்.

அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள்.


5 திருமுகங்களையும் 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இந்த காயத்ரி மந்திரம் சொல்லும் போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீ விஷ்ணுவையும் நினைவில் நிறுத்திச் சொல்ல வேண்டும்.இதைச் சொல்வதால் கொடிய வினைகள் அகலும். உடல் பலமும், மனோபலமும் கூடும்.

கீழ்க்கண்டவாறு ஐந்து இடங்களில் இதை நிறுத்திச் சொல்ல வேண்டும்.


ஓம்


பூர்ப் புவஸ்ஸுவதத்ச

விதுர் வரேண்யம்பர்கோ

தேவஸ்ய தீமஹிதியோ

யோன ப்ரசோதயாத்.


1 Kommentar:

Unknown hat gesagt…

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
வர்ஹோ தேவஸ்ஸிய தீமஹி
தியோ யோ நஹ ப்ரஸோதயாத்

நுவரேலியாவில் இருக்கும் ஸ்ரீகாயத்ரி பீட உபாசகர் சித்தர் முருகேசு சுவாமிகள் மேற்சொன்னவாறே காயத்ரி மந்திரத்தைக் கூற நான் கேட்டிருந்தேன்.