Donnerstag, 19. März 2009

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர் சீர்காழியில் அந்தணர் மரபு சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகபிப் பிறந்தார்.

3-ம் ஆண்டில் உமையம்மையாரின் ஞனப்பால் உண்டு, திருப்பதி தோறும் சென்று பதிகம் பாடி, சைவ எழுச்சியூட்டி, திரமண நல்லூரில் திருமண நாளன்று மணமகளோடு கோவிலினுள் சென்று இறைவனுடன் கலந்தார்.

இவர் அப்பரின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். திருநீல கண்ட யாழ்ப்பாணர் இவரோடு சென்று இவருடை பால்களை எல்லாம் யாழ் இசைத்தார். ஒரு முறையாவது யாழாலும் இசைக்கக முடியாத பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினார். இதை உணர்ந்த திரு நீலகண்ட யாழ்பாணர் தனது யாழை முறிக்க முயன்ற போது இதைக் கண்ட சம்பந்தர் அதைத் தடுத்து யாழ்ப்பாணருக்கு தேறுதல் மொழி கூறினாராம்.

அன்றில் இருந்து இதை யாழ்முறிப்பண் என்பார்களாம். ஆனால் இப்போ இதைத்தான் சிலர் "நீலாம்பரி" என்பர், சிலர் இதை "அடாணா" என்பார் என்று வரலாற்றில் செல்லப்படுகின்றது.

சம்பந்தர் 16.000 பாடல்களைப் பாடினாராம், ஆனால் 384 பதிகங்களுக்குள் அடங்கிய 4181 பாடல்களே இன்று மக்களிடம் உள்னவாம்.

இவை இனிய ஓசைகளுடன் கூடிய இசைப்பாக்கள் ஆகும். யமகம். திரிபு, மொழிமாற்று, அடிமாற்று எனச் சொல்லணிகள் இப்பாக்களில் கையாளப்பட்டுள்ளன. சிவபெருமானின் உருவ அழகிலும், திருக்குணங்களிலும் ஈடுபட்டுத் தலைவி நிலையில் நின்று பாடிய பாக்கள் பலவகை. இயற்கை வருணைனைப பாக்கள் சில வகை. எல்லாப் பாக்களும் இனிய, எளிய சொல்லால் இன்னோசை ததும்பும் வண்ணம் அமைந்துள்ளன.

சோழ நாட்டில் சைவசமையத்தை உறுதி பெறச்செய்து பாண்டிய நாட்டை சமணர் படியில் இருந்து மீட்ட பெருமையும் சப்பந்தரை சேரும்.

பதிகம் தோறும் சிவன் இராவணன் செருக்கை அடங்கியதையும், சிவனுக்கு மாலும் அயனும் தாழ்ந்ததையும் கூறுவதோடு, சமணக் கொள்கைகளையும் சாடுகின்றார். பதிய இறுதியில் தன் பெயரை இணைத்துப்பாடி புதுமுறையினைப் புகுத்தியுள்ளார்.

தமிழகமெங்கும் செந்தமிழோசையை முழங்கச்செய்து சைவ சமயத்தோடு தமிழ் வளமும் மிளிரச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

அன்புடன்
கவிதைக்குயில் ராகினி
ஜெர்மனி.

2 Kommentare:

உலக சைவ மாநாடு hat gesagt…

அன்புடையீர்,
வணக்கம்.உலக சைவப் பேரவையின் பன்னிரன்டாவது உலக சைவ மாநாடு தில்லையில் வரும் பிப்ரவரி மாதம் 5,6,7 தேதிகளில் நடத்தத்
திட்டமிடப்பட்டு உள்ளது.பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் அடிகள் பெருந்தகையையும், யோகானந்த அடிகள் ( பிரான்சு ) அவர்களையும் அமைப்பாளர்களாகக் கொண்டு , சீர்வளர்சீர் குன்றக்குடி குருமகா சந்நிதானம் அவர்களைத் தலைவராகக் கொண்டு
விழாக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களைப் புரவலர்களாகக் கொண்டுள்ள இந்த சைவ மாநாட்டில் பங்கேற்க தங்களை வரவேற்கிறோம்.தங்களுக்குத் தெரிந்த சைவ ஆர்வலர்களின் முகவரி, தொலைபேசி, மற்றும் மின்அஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
வேண்டுந் தங்களன்பு
அன்புடன்
தவத்திரு.மருதாசல அடிகள்

www.bogy.in hat gesagt…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in